ஆன் - லைனில் பணம் சம்பாதிப்பது என்பது மிக எளிதான ஒன்று அல்ல. வேலை செய்தால் மட்டும் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியும். வெறும் ஒன்றிரண்டு கிளிக்குகள் மட்டும் செய்துவிட்டு, "லட்சக் கணக்கில்" பணம் சம்பாதிக்க கனவு கண்டால் நிச்சயம் பலிக்காது.
 |
| ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி |
கவர்ச்சி விளம்பரங்களை நம்பாதீர்: | Earn money online in Tamil Nadu
ஒரு நாளில் 1000$ சம்பாதிக்கலாம்... ஒரு மாதத்தில் "ஒரு கோடி" ரூபாய் சம்பாதிக்கலாம்.. போன்ற ஆன்லைன் விளம்பரங்கள் நம்பகத் தன்மை இல்லாதவை. அது போன்ற கவர்ச்சி விளம்பரங்களை நம்பி ஏமாந்து போனவர்கள் பலர் உண்டு. அட்வான்ஸ் பணமாக 5000 ரூபாய் கட்டினால், மாதந்தோறும் 30000 ரூபாய் சம்பாதிக்க முடியும் என ஆசை காட்டும் ஆன்லைன் விளம்பரங்கள் நிறைய இருக்கிறது.
இதில் ஒரு கேள்வி உண்டு. அந்த கேள்வியை ஒவ்வொருவரும் கேட்டுப் பார்த்தால் அவர்கள் ஏமாற்றுகாரர்கள் என உங்களுக்கே புரியும். அதாவது நீங்கள் செய்யும் வேலைக்கு ஏன்பணம் கட்ட வேண்டும்? என்பதுதான்.
வேலை முடித்த பிறகு அவர்கள் பணம் கொடுத்தாலே போதுமானதுதானே? ஆன் லைனில் வேலை பெறுவதற்கு முன் பணம் கட்டி, பிறகு செய்து முடித்த வேலையை அவர்களுக்கு அனுப்பி, அதை அவர்கள் பார்த்துவிட்டு, "அது சரியில்லை..." "இது சரியில்லை" என அதை REJECT செய்து விடுவார்கள்.
நீங்கள் கட்டிய முன் பணமும் அரோகராதான்.. ஒரு மாதம் முழுமைக்கும் நீங்கள் முக்கி முக்கி செய்த வேலைகள் எல்லாமே வேஸ்ட். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், "ஆன்லைனில் மிக எளிதாக" பணம் சம்பாதிக்க முடியவே முடியாது.
குறிப்பிட்ட காலம் வரை அதைக் கற்றுக்கொண்டு, அதன் பிறகு அதில் உள்ள நெளிவு சுழிவுகளை தெரிந்து கொண்ட பிறகு வேண்டுமானால், ஓரளவுக்கு எளிதாக பணம் சம்பாதிக்க முடியும்.
ஆன்லைனில் எப்படி பணம் சம்பாதிப்பது?
நிறைய வேலைகள் இருக்கிறது.. கட்டுரைகள் எழுதி தருவது, மியூசிக் கற்றுத் தருவது.. போட்டோக்களை விற்பது, ஓவியங்களை விற்பது, வெப்சைட்களில் எழுதி சம்பாதிப்பது, வெப்சைட்களை தொடங்கி அதில்விளம்பரங்கள் வைத்து சம்பாதிப்பது இப்படி... பல லட்சக்கணக்கான வேலைகள் ஆன்லைனில் இருக்கிறது.

அவரவர் திறமைக்கு ஏற்ப, அறிவுக்கு ஏற்பகட்டாயம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியும். இன்னும் சொல்லப் போனால், ஆங்கில அறிவே இல்லாதவர்கள் கூட இதில் பணம் சம்பாதிக்க முடியும். எல்லவாற்றிற்கும் திறமைதான் முக்கிய காரணம்.எப்படி என்றால், ஆங்கில அறிவு இல்லாதவர்கள் விஷயங்கள் நன்கு தெரிந்துகொண்டு, படித்து, நன்றாக ஆங்கிலத்தில் எழுத கூடிய நபர்களை வேலைக்கு அமர்த்தி கொள்கிறார்கள்.உதாரணமாக ஒரு டெக் வெப்சைட் - Tech Website ஆங்கிலத்தில் ஆரம்பிக்க வேண்டுமானால், அதற்காக, அந்த வெப்சைட்டில் வேலை செய்வதற்காக படித்த, ஆங்கிலம் தெரிந்த, கட்டுரைகள் நன்றாக எழுத தெரிந்த கல்லூரி மாணவர்கள் போன்றவர்களை நல்ல சம்பளம் கொடுத்து வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்கள். ஐடியாவை மட்டும் அவர்கள் சொல்வார்கள்.மீத கட்டுரையை அந்த கல்லூரி மாணவர்கள் எழுதி கொடுத்து விடுகின்றனர். அதன் பிறகு அந்த வெப்சைட்டை பாப்புலர் ஆக்குவதும், புரோமோட் செய்வதற்கும் சில வேலை ஆட்களை வைத்துக் கொள்கிறார்கள். இப்படி பணம் + திறமை இருந்தால், எந்த ஒரு தொழிலையும் வெற்றி கரமாக ஆன்லைனிலேயே செய்து முடிக்க முடியும்.பொருட்களை வாங்கி விற்பது முதல், புதிய புதிய செய்திகளை தரும் பத்திரிகை வெப்சைட்கள் வரை எல்லாவற்றிலும் இன்று பணம் சம்பாதிக்கின்றனர். எல்லாம் மேற்கூறிய வழிகளில்தான்.அதிக உழைப்பு...அதிக பணம்... அவ்வளவுதான்... இதில் இன்னொரு வகையான ஆன் லைன் பணம் சம்பாதிக்கும் வழிமுறையும் இருக்கிறது. அது "Smart Way To Earn Money Online". அது பற்றி வேறொரு பதிவில் எழுதுகின்றேன்.